Friday, February 6, 2026
Homeமுகத்துல கரும்புள்ளிகள் நிறைய இருக்கா? கருமை நீங்கி முகம் கலராக இந்த 5 பொருள் போதும்..!

முகத்துல கரும்புள்ளிகள் நிறைய இருக்கா? கருமை நீங்கி முகம் கலராக இந்த 5 பொருள் போதும்..!

முகத்தில் கரும்புள்ளிகள், கருந்திட்டுக்கள், ஆகியவை அதிகமாக இருக்கிறதா? என்னென்னவோ கிரீம்களை முயற்சி செய்தும் பலன் இல்லையா? இனி அந்த கவலையை விடுங்கள். நம் வீட்டு சமையலறையில் இருக்கும் இந்த ஐந்து பொருள்கள் மட்டுமே போதும் உங்கள் சருமத்தில் இருக்கும் கருமையை விரட்டி அடிக்க.

சருமத்தில் ஏற்படும் கருமையை பிக்மெண்டேஷன் என்று குறிப்பிடுவோம். சருமத் துளைகளுக்குள் இருக்கும் மாசுக்கள், இறந்த செல்கள் நீண்ட நாட்களாக தங்கி அவை கரும்புள்ளிகளாக மாறுகின்றன, அடிப்படையில் இந்த கரும்புள்ளிகள் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முறையாக எக்ஸ்போலியேட் செய்யாமல் விடும்போது ஏற்படுகிறது. கீழ்வரும் இந்த இயற்கையான பொருட்களை வைத்து சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்யும்போது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்களால் வரும் நிறமாற்றம், கருந்திட்டுக்கள் அனைத்தும் மாறும்.

​கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் சருமம், தலைமுடி மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு அற்புதமான மருந்து, இது உங்களை எப்போதும் இளமையாகவே வைத்திருக்க கற்றாழை ஒன்றை போதும், அதனால் தான் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைக்கு குமரி என்றொரு பெயரும் உண்டு,

கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் தான் சருமத்தின் ஆழம் வரை சென்று இறந்த செல்களை நீக்குவதோடு சரும செல்களை புதுப்பிக்கவும் செய்கிறது.

நன்கு முகத்தை கழுவி விட்டு பிரஷ்ஷான அல்லது கடைகளில் வாங்கிய பிளேவர்கள் சேர்க்காத சுத்தமான கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்து வர கருமை வேகமாக நீங்கும்.

மஞ்சள்

நம் பாட்டி, தாத்தா காலத்தில் முகத்தை வசீகரமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதற்கு எந்தவித க்கிரீம்களும் அப்போது கிடையாது. அவர்கள் பயன்படுத்திய இயற்கையான பொருள் என்றால் அது மஞ்சள் தான்.

இந்த மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் ஆற்றல் வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருக்கின்றன அதனால் பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சளை ஹீலிங் செய்வதற்கு பயன்படுத்தி வந்தார்கள்.

தினமும் குளிக்கும் போது கடைசியாக ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் முகத்தில் அப்ளை செய்து குளித்து வரலாம். அதைவிட இரவில் முகத்தை நன்கு கழுவி விட்டு மஞ்சளுடன் சில துளிகள் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவி வர மிக விரைவாக முகத்தில் உள்ள கருமை நீங்கும். முகம் பளபளக்கும். உங்கள் முகம் தங்கம் போல இளமையாக மாற்றம்.
​எலுமிச்சை சாறு

​எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு வைட்டமின் சி சத்து மிக அதிக அளவில் உள்ளது. இது இயற்கையாகவே பிளீச்சிங் பண்புகளைக் கொண்டது. அதனால் சருமத்தின் மேற்பரப்பில் இருக்கும் அன் ஈவன் ஸ்கின் டோன், பிக்மென்ட்டேஷன் ஆகியவற்றைக் குறைத்து முகத்தை பளபளப்பாக மாற்ற உதவி செய்யும்.

எலுமிச்சை சாறு நேரடியாக சருமத்தில் அப்ளை செய்யலாம், அழற்சி உள்ளவர்கள் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்தும் உங்களுடைய பிற ஃபேஸ் பேக்குகளில் கலந்தும் பயன்படுத்தலாம்.

ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு ஒரு ஸ்பூன் தேன் கலந்து அதை முகத்தில் அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே உலர விடுங்கள். பின்பு லேசாக நீர் தெளித்து விரல்களால் வட்ட வடிவில் முகத்தை மசாஜ் செய்து விட்டு வெதுவெதுபபான நீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் மிக விரைவில் பிக்மென்டேஷன் அத்தனையும் குறைந்து நல்ல மாற்றத்தை சருமத்தில் ஏற்படுத்தும்.

RELATED ARTICLES

Most Popular