குருநாகல் போகமுவ பிரதேசத்திலிருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாயுடன் நீராடச் சென்ற 9 வயது குழந்தையின் சடலம் நேற்று (25) நீரோடையிலிருந்து மீட்கப்பட்டது.
இந்நிலையில், காணாமல் போன தாய் மற்றும் 2 வயது மகனின் சடலங்கள் இன்று (26) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
