Friday, February 6, 2026
Homeமனதுக்கும் ஓய்வு வேண்டும்..!

மனதுக்கும் ஓய்வு வேண்டும்..!

இன்றைய இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஓரளவுக்கு வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைக்கிறார்கள். ஓய்வெடுக்க நேரமின்றி சுழன்று கொண்டிருக்கிறார்கள்.

வேலையை முடித்துவிட்ட போதிலும் அடுத்த நாளுக்குரிய வேலைக்கு திட்டமிடுதலை மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய மனமும், உடலும் ஓய்வெடுக்க விரும்புவதில்லை. வேலை, பணம் திரட்டுவது பற்றிய சிந்தனை மேலோங்கி கொண்டிருக்கும். இல்லாவிட்டால் எதையாவது பற்றி சிந்தனை செய்து கொண்டிருக்கும்.

எத்தகைய கடினமான சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தாலும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை மனதுக்கு ஓய்வு கொடுக்க செலவிடுங்கள். அந்த சமயத்தில் மனம் அமைதியாக இருக்க வேண்டும். எந்தவிதமான சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒருபோதும் மனதை அலைபாய விடாதீர்கள். தினமும் குறிப்பிட்ட நேரத்தை மன அமைதிக்கான பயிற்சிக்கு ஒதுக்குவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அது முடியாத பட்சத்தில் தியான பயிற்சி மேற்கொள்ளும் இடங்களுக்கு செல்லுங்கள். அங்கு பயிற்சி செய்து மன அமைதியை தக்கவைக்கவும், மனதுக்கு ஓய்வு கொடுக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.

RELATED ARTICLES

Most Popular