மழை காலம் தொடங்கியாச்சு சருமத்தை பாதுகாக்க இதோ சில டிப்ஸ்..!

கோடைக்காலத்தில் வெயில் வாட்டி வதைத்து பல சரும பிரச்சனைகளை உண்டாக்கும். வெயில் காலத்தில் குறிப்பாக, சருமம் வறட்சி அடைவது வழக்கம்.

ஆனால், மழைக்காலங்களில் வேறுவிதமான சரும பிரச்சினைகளும் ஏற்படும். குறிப்பாக, சரும வறட்சி உள்பட தோல் சொரசொரப்பு, உதடுகளில் வெடிப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.

இதனை சமாளிக்க சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்..

தினமும் குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய் முகம், உடல் முழுக்க தடவி, வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இது வெயில் காலத்திற்கும், மழை காலத்திற்கும் ஏற்ற டிப்ஸ். இது, சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

சரும பாதுகாப்புக்கு அவ்வபோது முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீக்குவது அவசியம். அவ்வாறு ஃபேஷியல் செய்வதன் மூலம், இறந்த செல்களை நீக்கலாம். கெமிக்கல் பேஷியலை செய்வதற்கு பதிலாக பழ பேஷியல் செய்வதன் மூலம் சருமத்தை இன்னமும் பாதகாப்பாக வைத்திருக்க முடியும்.

அந்த வகையில், சரும பொலிவுக்கு பப்பாளி பழம் எப்போதும் சிறந்தது. பப்பாளி பழத்தை மைய அரைத்து முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தடவி காய்ந்ததும் சிறுது நேரம் கழித்து கழவி விடவும். இது தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.

உதடு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய் சிறந்தது. பாத வெடிப்புக்கு மாய்சுரைசர் பயன்படுத்துவது நல்ல பலனை தரும். மழைக்காலத்தில் சேற்று புண் அதிகம் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், கடுக்காய் பொடியை தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர விரைவில் குணமாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles