தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு நாட்டிற்கு வருகை

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு எதிர்வரும் 25ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

அந்த அமைப்பைச் சேர்ந்த 30 கண்காணிப்பாளர்கள் பொதுத் தேர்தலைக் கண்காணிக்க வருவார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக வருகைதந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தொடர்ந்தும் நாட்டிலேயே தங்கியுள்ளன.

பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அவர்களுடன் மேலதிக ஒரு குழுவும் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here