தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டில் மேடையில் பேசிய குறித்த கட்சியின் தலைவர் விஜய், அரசியல் தொழில்நுட்பம் மட்டும் தான் மாற வேண்டுமா? அரசியல் மாறக்கூடாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இலட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டுக்கு அந்த கட்சியின் 4 மணியளவில் தொண்டர்களின் ஆரவார கோஷத்துக்கு மத்தியில் மிகவும் உற்சாகமாக கட்சி துண்டை தோளில் போட்டுக்கொண்டு தொண்டர்களின் நோக்கி கையசைத்தப்படி மோடைக்கு வந்தடைந்தார்.

பின்னர் மேடைக்கு அருகில் அமர்ந்திருந்த பெற்றோர்களிடம் ஆசி பெற்ற பின்னர் தனது உரையை தொடங்கினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய நம்பிக்கை. கவனமாக களமாட வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாற வேண்டுமே? அரசியல் மாறக்கூடாதா? அரசியல்வாதிகளை இகழ்ந்து பேச மாட்டேன். அதுக்காக கண்மூடியும் இருக்க மாட்டேன்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. யாரின் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் நாங்கள் அல்ல.

பெரியார் தான் கொள்கை தலைவர். ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுக்கப்போவதில்லை.

பிளவுவாதம், ஊழல் மலிந்த அரசியல்தான் தவெக இன் எதிரி. நம் கொள்கைகளை அறிவித்துவிட்டதால் கதறல் சத்தம் இனி அதிகமாக கேட்கும்.

பத்தோடு பதினொன்றாக, மாற்றுக் கட்சி என சொல்லிக்கொண்டு கூடுதல் சுமையாக வரவில்லை. ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன் என விஜய் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here