அக்குரணையில் மீண்டும் வெள்ளம்..!

வங்காள விரிகுடாவில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடுமையான மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக, அக்குரணை பிரதேசம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அக்குரணை 6ஆம் கட்டை, கண்டி- யாழ்ப்பாணம் வீதி, வெள்ளத்தில் மூழ்கி வருவதாகவும் பிரதேசத்தில் உள்ள கட்டடங்களில் இருந்து பொருட்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,  எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று மாலை வேளையில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles