சமீபத்தில் நடிகை நயன்தாரா தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து வெளியிட்ட கடிதம் பெரிய சர்ச்சை ஆனது. நானும் ரௌடி தான் பட தயாரிப்பாளரான தனுஷ் அந்த படத்தின் காட்சிகள், பாடல், பாடல் வரிகள் போன்ற எதையும் தனது திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை என கூறி இருந்தார்.

தனுஷுக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்த தாகவும், அவர் தன் மீது இருக்கும் வெறுப்பு காரணமாக இப்படி செய்கிறார் என கோபமாக குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் தனுஷ் சண்டை பற்றி நடிகர் ராமராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ‘இது எல்லாம் எதுக்கு சார். நடந்துக்குட்டு இருக்கும். நம்ம பாட்டுக்கு வேலையை பாத்துட்டு போவோம்.’

‘ரோட்டில் போகும்போது இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். கண்டுக்காம போறோம்ல அதுமாதிரி போவோம். அதை பத்தி திருப்பி திருப்பி கேக்காதீங்க’ என ராமராஜன் கூறி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here