லண்டனின் மையப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இறைச்சி சந்தை நிரந்தரமாக மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஸ்மித்ஃபீல்ட் இறைச்சி சந்தையை நடத்தும் லண்டன் கார்ப்பரேஷன், முன்பு அதை இடமாற்றம் செய்ய திட்டமிட்டது. அத்துடன் பில்லிங்ஸ்கேட் மீன் சந்தையையும் டாகன்ஹாமில் சுமார் 1 பில்லியன் பவுண்டுகள் தொகையில் உருவாக்கப்படும் வளர்ச்சித் திட்டத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், அந்த இடமாற்றத் திட்டங்கள் இந்த மாத தொடக்கத்தில் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சந்தைகளை இயக்குவதை நிறுத்த வேண்டுமா என்பது குறித்து இன்று பிற்பகல் கார்ப்பரேஷன் தனியார் வாக்கெடுப்பை நடத்துகிறது.

மட்டுமின்றி, சந்தையில் தங்களின் தளங்களில் இருந்து விலகுவதற்கு உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது. அவர்கள் திரும்பப் பெறுவதற்கு வாக்களித்தால், கார்ப்பரேஷன் பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

எனவே சந்தையை நடத்துவதற்கு அது இனி பொறுப்பாகாது. சந்தையில் உள்ள இறைச்சி வியாபாரிகளுடன் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க கார்ப்பரேஷன் திட்டமிடுவதாகவும், வெளிவரும் தகவலின் அடிப்படையில் அந்த ஒப்பந்தம் 300 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்மித்ஃபீல்டில் 800 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சந்தை செயல்பட்டு வந்துள்ளது. 1327ல் இருந்தே இறைச்சி சந்தை மற்றும் பிற மொத்த உணவு சந்தைகளை நடத்துவதற்கான உரிமையை மாநகராட்சிக்கு வழங்கப் பட்டுள்ளது.

தற்போதைய சந்தை வளாகமானது 1868ல் கட்டப்பட்டது. லண்டன் கார்ப்பரேஷன் சந்தையை நடத்துவதுடன் தரை வாடகையை செலுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here