மவுத்வாஷ் தினமும் பயன்படுத்தினால் புற்றுநோய் ஆபத்து.? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

லிஸ்டரின் கூல் மிண்ட் மௌத் வாஷை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அது உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தினமும் ஒருவர் ஆல்கஹாலை பயன்படுத்தி வந்தால், அது வாயில் ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஆஞ்சினோசஸ் போன்ற உயிரினங்களை வாயில் அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விரு பாக்டீரியாக்களும் ஈறு நோய், உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயங்களுடன் தொடர்புடையவை என்னும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த லிஸ்டரின் கூல் மிண்ட மௌத் வாஷை தினமும் பயன்படுத்தி வருபவர்களின் வாயில் ஆக்டினோபாக்டீரியா என்னும் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க தேவையான பாக்டீரியாக்கள் குறைவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் லிஸ்டரின் கூல் மிண்ட் மௌத் வாஷில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக உள்ளது. குறிப்பாக எத்தனால் என்னும் கெமிக்கல் அதிகளவில் உள்ளது. இந்த கெமிக்கலில் அடர்த்தி அதிகமாக இருந்து, அவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது, அது குறிப்பிட்ட வகையான புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

இப்படிப்பட்ட மௌத் வாஷை தொடர்ந்து 3 மாதத்திற்கும் மேலாக பயன்படுத்தி வந்தால், அது உணவுக்குழாய் மற்றும் குடலில் உள்ள மென்மையான திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

குறிப்பாக இந்த ஆய்வில் லிஸ்டரின் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றாலும், இதேப் போன்று ஆல்கஹால் அடிப்படையிலான பிற மௌத் வாஷ்களின் பயன்பாட்டினாலும் இப்படியான அபாயம் இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வில் லிஸ்டரின் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றாலும், இதேப் போன்று ஆல்கஹால் அடிப்படையிலான பிற மௌத் வாஷ்களின் பயன்பாட்டினாலும் இப்படியான அபாயம் இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles