இயக்குநர் ஜெயபாரதி மரணம்!

இயக்குநர் ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாகக் காலமானார்.

சென்னை- ஓமந்தூரார் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (06) காலை அவர் காலமானார்.

கடந்த 1979ஆம் வெளியான ‘குடிசை’ திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் ஜெயபாரதி.

இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வென்றது. இவரது இயக்கத்தில் ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’, உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’, ‘குருஷேத்திரம்’, ‘புத்திரன்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அவரது மறைவுக்குத் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles