ஜனவரி மாதம் வரை முட்டை மற்றும் கோழிக்கறியின் விலையில் மாற்றம் இருக்காது என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தவிசாளர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் இறைச்சி தட்டுப்பாடு இன்றி மக்களுக்கு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை 1000 ரூபாவிற்கும் குறைவாக பேணுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதாக அஜித் குணசேகர மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here