ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நேட்டோ விவகாரத்தில் 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

இதில் இருதரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுவிட்டன.

உக்ரைனுக்கு அமெரிக்கா தனது ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது. மேலும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவதற்கு ஊக்கப்படுத்துகிறது.

அதேபோல் ரஷ்யாவுக்கு பின்னால் வடகொரியா இருந்து கொண்டு ஆயுதங்கள், வீரர்களை அனுப்பும் வேலைகளை செய்து வருகிறது.

கடந்த சில நாட்கள் முன்பு உக்ரைன், ரஷ்யா மீது நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவியது.

அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தன்னிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.

இதனால் 3 ஆம் உலக போரே ஏற்படும் நிலை உருவானது.

ஆனால் போரை நிறுத்தும் எண்ணம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு செயற்கை கோள் வெளியிட்ட புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த புகைப்படங்களில் ரஷ்யா தன்னிடம் உள்ள எண்ணெய் பேரல்களை வடகொரியாவுக்கு சட்டவிரோதமாக வழங்குவது தெரியவந்தது.

வடகொரியா தனது ராணுவ வீரர்கள், ஆயுதங்களை ரஷ்யாவுக்கு, உக்ரைனுக்கு எதிரான போரில் வழங்குகிறது. இதற்கு ஈடாக ரஷ்யா எண்ணெய் வழங்கி உள்ளது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு உதவும் பிரிட்டன் மீது சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனுக்கு உதவும் நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் பல்வேறு நாடுகளை ரஷ்யா பகைத்து உள்ளது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மீது சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

அப்படி சைபர் போர் தொடங்கினால் உலக அளவில் பெரும் பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here