சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் “கடவுளே அஜித்தே” என்று கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடவுளே அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது என்று நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில்,

“சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் க… அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது.

எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here