அரச உத்தியோகத்தர்களுக்கான 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன், தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணம் போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 6,000 ரூபாய் உதவித்தொகையை அரச அதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் எனவும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார கேட்டுக் கொண்டுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here