சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி துவங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது.

இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட கூடாது என 160-க்கும் அதிகமான இங்கிலாந்து அரசியல்வாதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உரிமைகள் மீதான தலிபான் ஆட்சியின் தாக்குதலுக்கு எதிராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் இங்கிலாந்து அரசியல்வாதிகள் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிராகரித்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here