தாய்வானில் இன்று அதிகாலை 12.17 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டின் யுஜிங் நகரில் இருந்து வடக்கே 12 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்துள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் 15 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், எனினும் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here