அமெரிக்காவில் டிக்டொக் செயலியை வாங்க மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டிக்டொக் செயலியின் அமெரிக்கத் துணை நிறுவன உரிமையை சீனர்கள் வசமிருந்து கைமாற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் டிக்டொக்கின் சந்தை மதிப்பு கூடிக் கொண்டே இருக்கின்ற காரணத்தால் டிக்டொக் நிறுவனப் பங்கில் சுமார் 50 சதவீதம் அமெரிக்கர்கள் வசம் இருக்க வேண்டியது அவசியம் என ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 17 கோடி பேர் டிக்டொக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here