தெற்கு சூடானில் இன்று (29) பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூடானின் வடபகுதியில் உள்ள ஆயில்பீல்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம் தெற்கு சூடானின் யூனிட்டி ஸ்டேட் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

அதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில ஆண்டுகளில் சூடானில் பல்வேறு விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here