எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படும் சகல கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here