சாம்பியன்ஷிப் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளது.

இதன்படி ரோஹித் சர்மா தலைமையிலான குறித்த குழாமில் சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டெல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, மொஹமட் சமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா வெளியேறியுள்ளார்.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here