ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மூன்று மாணவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் இரண்டு குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொழில்நுட்ப பீடத்தின் மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்கச் சென்றபோது, ​​அதே பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் குழு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, காயமடைந்த மாணவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும் வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here