பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி நாளை (26.02.2025) ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் வெளியாகிய சில சமூக ஊடக பதிவுகளில் நாமல் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here