புனித டேவிட் தினச் செய்தியை முழுவதுமாக வெல்ஷ் மொழியில் வழங்கி, இளவரசர் வில்லியம் அரச குடும்ப ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

வேல்ஸின் புரவலர் துறவி புனித டேவிட், 12ஆம் நூற்றாண்டில் ‘புனித டேவிட் புனிதர்’ பட்டம் பெற்றார். அன்றில் இருந்து அவரது விழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ஆம் திகதி அன்று வருகிறது.

வேல்ஸில் உள்ளவர்கள் daffodils மற்றும் leeks அணிந்து, பாரம்பரிய வெல்ஷ் உணவுகளை உண்பதன் மூலமும் இந்த தினத்தை கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில், தெற்கு வேல்ஸின் Pontypriddயில் வார இறுதியைக் கழிக்கும் இளவரசர் வில்லியம், சனிக்கிழமை காலை சமூக ஊடகங்களில் ஒரு சிறிய கிளிப்பில் தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் வெல்ஷ் மொழியில் புனித டேவிட் தினச் செய்தியை முழுவதுமாக வழங்கியது, அரச குடும்ப ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த செய்தியில், “வணக்கம். இன்று, புனித டேவிட் தினத்தில், அதன் வரலாறு, அதன் கலாச்சாரம் மற்றும் அதன் நம்பமுடியாத மக்களாக வேல்ஸைக் கொண்டாட நாம் ஒன்றுக்கூடுகிறோம். அதன் மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகள் முதல் அதன் மொழி வரை, வேல்ஸ் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.

இன்று, வேல்ஸைப் பற்றிய மாயாஜாலமான அனைத்தையும் நாம் கொண்டாடுகிறோம். வேல்ஸ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும், புனித டேவிட் தின வாழ்த்துக்கள்” என கூறப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here