செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கின்றன.

பயனாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கிடையில் கடுமையான போட்டி நிலவுகின்றது.

அந்த வகையில், சமீபத்தில் வெளியான டீப் சீக் சாட்பாட் ஏ.ஐ உலகின் புதுவரவாக இருந்தாலும், தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.

காரணம், இதில் தகவல்கள் சற்று தெளிவாகவும் எளிமையாகவும் கிடைப்பதனால் பயனர்கள் இதை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது கூகுளும் இணைந்துள்ளது.

கூகுள் தற்போது தனது பயனாளர்களுக்கு ‘ஆஸ்க் ஃபார் மீ’ (Ask For Me) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு வசதியை உருவாக்கி உள்ளது.

மிக விரைவில் குறித்த புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்குவரும் என கூகுள் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here