பிரமிட் போன்ற மோசடிக்குள் சிக்கிவரும் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான கல்வியறிவு இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 

இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் புதிய தொழில்நுட்ப சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக் கருத்தை வௌியிட்டார். 

“உங்கள் கையில் பணம் இருந்தாலும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும், மோசடிக்கு ஆளாக நேரிடுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. நிதி கல்வியறிவு மற்றும் அதைப் பற்றிய அறிவு இல்லாமை. குறிப்பாக இணையத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களைப் பார்க்கிறோம். அதில் சலுகைகள் காட்சிப்படுத்தப்படுகிறது. இவற்றை வழங்குவதாக மின்னஞ்சல்கள் வருகின்றன.

இப்போது, ​​புதிதாக வந்துள்ள விடயம் என்னவென்றால், பல்வேறு விவசாய நடவடிக்கைகளுக்காக பணம் திரட்டுவதற்காக விரிவாக விளம்பரம் செய்கிறார்கள். நீங்கள் மரங்களை நட்டு முதலீடு செய்தால், நீங்கள் பெரும் நன்மைகளைப் பெறுவீர்கள். நீங்கள் பழங்களை பயிரிட்டால், அவை கிடைக்கும் என்றும், அல்லது நீங்கள் வல்லப்பட்டை பயிரிட்டால், அவை கிடைக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, முதலீடு என்ற போர்வையில் மோசடியாகப் பணத்தைப் பெற்று, பின்னர் அந்தப் பணத்தை பிரமிட் திட்டங்களிலோ அல்லது அங்கீகரிக்கப்படாத வைப்புத்தொகைகளிலோ வைப்பதன் மூலம் பணத்தை இழக்கும் போக்கு உள்ளது. அப்படி ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தால், முதலில் நீங்கள் கேட்க வேண்டியது, அந்தப் பயிர் எப்படி இவ்வளவு பெரிய பலனைத் தருகிறது என்பதுதான்.” 

தொடர்நது கருத்துகளை வெளிப்படுத்திய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, மக்களின் நிதி கல்வியறிவை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here