பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபைக்குச் சொந்தமான மின்சார அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (27) நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 8.30 முதல் மாலை 5 மணிவரை 8 1/2 மணி நேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க/சீதுவ நகர சபைப் பகுதிகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, வத்தளை, ஜா-எல, கட்டான, மினுவங்கொட பிரதேச சபைப் பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதியின் ஒரு பகுதியிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here