தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர்.

ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பிரியா பவானி சங்கர் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் நடந்த சர்வதேச போதைப்பொருள் தடுப்பு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

ஆண்டுதோறும் நடப்பெற்றும் இந்நிகழ்ச்சி ஜூன் 25 ஆம் தேதி சென்னை நடைபெற்றது. அப்போது நீங்கள் எதற்கு அடிமையாகி இருந்தீர்கள் என கேட்டதற்கு, ” நான் சாப்பிட்டிற்கு அடிமையகி இருந்தேன். பலவித சாப்பாட்டுக்களை தேடி பார்த்து சாப்பிடுவேன். பிரியாணி தான் சூப்பர் ஸ்டார் உணவாக இருக்கிறது எனக்கு என்று கூறியிருக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here