விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை பற்றி பேச்சு எடுத்தாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தொகுப்பாளர் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தான்.

இவர்கள் இருவருடைய நகைச்சுவையான பேச்சு, நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. ஜீனியர் மற்றும் சீனியர் என இரண்டு வகைகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடக்கும். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நடைபெற்று வருகிறது.

பின்னணி பாடகர்கள் மனோ, சித்ரா மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் நடுவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரசிகர்களால் ரசித்து பார்க்கும் மா கா பா – பிரியங்கா ஜோடி இந்த வாரம் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இல்லை. ஆம், பிரியங்காவின் திருமணம் சமீபத்தில் முடிந்த காரணத்தினால் அவர் இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இல்லை.

அவருக்கு பதிலாக இந்த வாரம் நடக்கப்போகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார் தெரியுமா. மா கா பா உடன் இணைந்து இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா தொகுத்து வழங்கவுள்ளார். அதனை Promo வீடியோவுடன் அறிவித்துள்ளனர்.

மகாநதி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை லட்சுமி பிரியா தற்போது சூப்பர் சிங்கர் மூலம் தொகுப்பாளினியாகவும் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இதோ Promo வீடியோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here