KKR உடனான தோல்விக்கு இதுதான் காரணம் – அக்சர் படேல்

டெல்லியில் நேற்று நடந்த லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்நிலையில், தோல்விக்கு பிறகு டெல்லி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:

நாங்கள் பவர் பிளேவில் சரியாக செயல்படவில்லை. கூடுதலாக 20 ரன்கள் கொடுத்து விட்டோம் என நினைக்கின்றேன்.

நாங்கள் பேட்டிங் செய்யும்போதும் சரியான ஷாட்களை ஆடவில்லை. சிறிய முறையில் அவுட்டாகி விட்டோம். பவர் பிளேக்கு பிறகு கொல்கத்தா அணியை நாங்கள் நல்ல முறையில் ரன் அடிக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தினோம்.

நாங்கள் இன்று சரியாக செயல்படவில்லை. குறைந்தபட்சம் ஒன்று அல்லது மூன்று வீரர்கள் நன்றாக அடித்து இருந்தால் வெற்றியைப் பெற்று இருக்கலாம். ஆனால் இலக்கிற்கு அருகே வந்து தான் தோல்வியை தழுவி இருக்கின்றோம்.

களத்தில் பொறுப்பான ஆட்டத்தை ஒவ்வொரு வீரர்களும் வெளிப்படுத்த வேண்டும். விப்ராஜ் ரன் குவித்து வந்தபோது நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. கடைசி வரை ஆஸ்டோஸ் சர்மா நின்று இருந்தால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்.

தற்போது ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு 3 அல்லது 4 நாட்கள் இடைவெளி இருக்கின்றது. இதில் மீண்டு வந்து விடுவோம் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles