புதிய பாப்பரசரை தீர்மானிக்க வாக்களிக்கும் 133 கர்தினால்களும் ரோமை அடைந்துவிட்டதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

அதற்கமைய, புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய மாநாடு சிறிது நேரத்திற்கு முன்னதாக அதிகாரபூர்வமாக ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் லத்தீன் மொழியில் “சாவியுடன்”(withkey) என்று பொருள்படும் “கொன்க்ளேவ்” என்று அழைக்கப்படும் மிகவும் இரகசியமான கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இதேவேளை இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here