பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், அதற்கு முன் கவனம் செலுத்தவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அவற்றின் மீது கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளது, மனித உரிமைகள் அமைப்பு ஒன்று.

சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு
பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bruno Retailleau, வெளிநாட்டவர்கள் பிரான்ஸ் குடியுரிமை பெறுவதற்கான விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், பிரான்சின் மனித உரிமைகள் அமைப்பான Defenseur des Droits என்னும் அமைப்பு, பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது ஏற்கனவே கடினமான விடயம், அதற்கு முன் கவனம் செலுத்தவேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது. அவற்றின் மீது கவனம் செலுத்துங்கள் என்று சாடியுள்ளது.

Defenseur des Droits அமைப்பின் தலைவரான Claire Hédon, ஒருவர் குடியுரிமைக்கு விண்ணப்பித்து அவர் அதற்கான பதிலைப் பெறுவதற்குள்ளேயே பல ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. அது ஏற்கனவே கடினமான விடயம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here