அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்தார்.

டாஸ்மேனியாவின் – டிராவல்லர்ஸ், ரெஸ்ட் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இரவு இந்த விபத்து இடம்பெற்றதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த நபர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜயதுங்கவின் மகன் தாரக விஜயதுங்க எனத் தெரிய வந்துள்ளது.

28 வயதான அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here