வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக இணைய வசதி வழங்கும் தானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சிரிக்கை விடுத்துள்ளனர்.

இலவச இணைய வசதியை (free wifi) வழங்குவதற்கு உங்களது OTP இலக்கத்தை பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்களிடமிருந்து விலகி இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி உங்களது OTP (One-time password) இலக்கத்தை அதில் பதிவு செய்ய வேண்டாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here