போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு விழாவிற்கு தான் அழைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

மே 3 தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு தனது முதல் சர்வதேச பயணமாக இந்தோனேசிய ஜனாதிபதி Prabowi Subianto-ஐ சந்திக்க பிரதமர் அல்பானீஸ் புதன்கிழமை ஜகார்த்தாவுக்குச் செல்வார்.

பின்னர் அவர் ரோம் நகருக்குச் செல்வார், அங்கு ஞாயிற்றுக்கிழமை செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் லியோவின் பதவியேற்பு திருப்பலி நடைபெறும்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டின் கலந்து கொண்ட பிறகு, கத்தோலிக்கரான பிரதமர் அல்பானீஸ், ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாகக் கூறினார்.

இந்தப் பயணம், அங்கு கலந்துகொள்ளும் பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்கும் என்று பிரதமர் அல்பானீஸ் கூறினார்.

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி உட்பட, இதுவரை சந்தித்திராத தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here