பிரித்தானியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான வீடுகளுக்கு நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற கவலை தலைதூக்கியுள்ளது.

அசாதாரணமான வறண்ட வசந்த காலநிலையின் காரணமாக நாட்டின் சில பகுதிகள் இந்த கோடையில் கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளன.

குறிப்பிடத்தக்க மழை பெய்யாவிட்டால், பிரித்தானியா “நடுத்தர” வறட்சி அபாயத்தை எதிர்கொள்ளும் என்று சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரித்துள்ளது.

தற்போது குழாய் நீர் பயன்பாட்டுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றாலும், நீர் விநியோக நிறுவனங்கள் வரவிருக்கும் மாதங்களில் நீர் இருப்பை பாதுகாப்பதற்காக பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டியிருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கள் அமைப்புகளில் உள்ள கசிவுகளை சரிசெய்யவும், வாடிக்கையாளர்கள் தண்ணீரை சேமிக்க ஊக்குவிக்கவும் ஒழுங்குமுறை ஆணையம் பயன்பாட்டு நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது.

16 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு நீர் வழங்கும் தேம்ஸ் வாட்டர், வறண்ட வானிலை நீடித்தால் நீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் பெரும்பாலான பகுதிகளில் வசந்த காலம் மிகவும் வறண்டதாக இருந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிப்ரவரி மாத இறுதியில் இருந்து நாட்டின் மீது நீடித்து வரும் “தடுக்கும் உயர் அழுத்த அமைப்பு” (blocking high) இதற்கு காரணம் என்று அது கூறியுள்ளது.

இந்த வகையான வானிலை அமைப்பு காற்றை கீழே இறங்கச் செய்து, மேகங்கள் உருவாகுவதைத் தடுத்து மழையைத் தடுக்கிறது.

மேலும், வலுவான ஜெட் ஸ்ட்ரீம் இந்த தடுக்கும் உயர் அழுத்த அமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது, இதனால் அது நிலையாக ஒரே இடத்தில் தங்கி நீண்ட வறண்ட காலநிலைக்கு வழிவகுக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here