குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில் விழுந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இன்று காலை 11.20 மணியளவில் Nirimba-இல் உள்ள Bruce நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து நடந்த இடத்திற்கு அவசர சேவைகள் விரைந்தன.

கேரவனுடன் Mazda uteயின் ஓட்டுநர் 80 வயதுடையவர். குறித்த நபரே சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

60 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

காரின் ஓட்டுநருக்கு உடல் ரீதியாக எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்த விபத்து காரணமாக வாகன ஓட்டிகளுக்கு நீண்ட தாமதம் ஏற்பட்டது. வடக்கு நோக்கிச் செல்லும் ஒரு பாதை பல மணி நேரம் மூடப்பட்டது.

விபத்து குறித்த விவரங்களை உறுதிப்படுத்தும் பணியில் போலீசார் dashcam காட்சிகளை தேடி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles