மத்திய சுவிட்சர்லாந்தில், ஒரு வேக கேமரா ஒரு அசாதாரண போக்குவரத்து குற்றவாளியைப் படம்பிடித்தது. பெர்னுக்கு அருகிலுள்ள கோன்சிக் நகராட்சியில் மணிக்கு 30 கிமீ வேக மண்டலத்தில் மணிக்கு 52 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற பறவை ஒன்றே இவ்வாறு வேக கமராவில் சிக்கியுள்ளது. . பின்னர் நகராட்சி தனது பேஸ்புக் பக்கத்தில் ரேடார் படத்தை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்தது. போலீசார் அந்த காட்சிகளைப் பார்த்தபோது ஆச்சரியமடைந்தனர், அதில் “வேகமாக வந்தவர்” ஒரு பறக்கும் வாத்து இனத்தை சேர்ந்த ஒரு பறவை என்பதைக் கண்டுபிடித்தனர். இந்தக் கதையை முதலில் “பெர்னர் ஜெய்டுங்” செய்தித்தாள் வெளியிட்டது, பின்னர் அது இன்னும் சுவாரஸ்யமான விவாதத்தை தூண்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here