சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் கட்டாய சுகாதார காப்பீட்டின் செலவுகளைக் குறைக்க சுவிஸ் அரசாங்கம் புதிய யோசனைகளைத் யோசனைகளை தேடிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்களின் உதவியை நாடுவதாக அரசு அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை, ஃபெடரல் கவுன்சில் அனைத்து சுவிஸ் குடியிருப்பாளர்களையும் மெய்நிகர் முறையில் கலந்துரையாடலில் பங்கேற்க அழைத்தது. அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்க முடியுமா என்பது குறித்து யோசனை உள்ள எவரும் இப்போது தங்கள் திட்டத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.

பரிந்துரைகளை அநாமதேயமாக சமர்ப்பிக்கலாம். மின்னணு யோசனைப் பெட்டி ஜூன் 20 வரை திறந்திருக்கும். சுவிட்சர்லாந்தில் சுகாதாரப் பராமரிப்பு மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஒன்றாக தீர்வுகளைக் கண்டறிவதே இதன் நோக்கமாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here