400,000 வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவனம்

ஒரு ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவனம் அதன் 400,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவோ அல்லது அகற்றவோ முடியாது என்பதை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை பெடரல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருந்த ஒரு காலநிலை குழுவால் தொடங்கப்பட்ட வழக்கைத் தொடர்ந்து EnergyAustralia இந்த அறிக்கையை வெளியிட்டது.

20,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழு, EnergyAustraliaவின் குற்றத்தை ஒப்புக்கொண்டதை ஆஸ்திரேலிய நுகர்வோருக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளது.

ஆனால் மற்ற நிறுவனங்கள் carbon offsetsகளைப் பயன்படுத்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதற்கும் ஒரு தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று குழு சுட்டிக்காட்டுகிறது.

எரிசக்தி பயன்பாட்டிற்காக புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் கார்பன் வெளியேற்றம் இன்னும் காலநிலை மாற்றத்திற்கு காரணமாகிறது.

EnergyAustralia 2024 ஆம் ஆண்டில் சந்தையில் இருந்து அதன் கோ நியூட்ரல் திட்டங்களை விலக்கிக் கொண்டது. மேலும் எதிர்காலத்தில் உமிழ்வைக் குறைப்பதில் கவனம் செலுத்தும் என்று தலைமை வாடிக்கையாளர் அதிகாரி கேட் கிப்சன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles