2025ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த 100 நன்கொடையாளர்கள் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா அம்பானி, விப்ரோ முன்னாள் தலைவர் அசீம் பிரேம்ஜி மற்றும் ஜெரோதா இணை நிறுவனர் கமல்நாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
2024ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி 407 கோடி இந்திய ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
விப்ரோ நிறுவனத்தில் இருந்து அசீம் பிரேம்ஜி தொடங்கிய அறக்கட்டளைக்கு 29 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பங்குகள் வழங்கப்பட்டுள்ளது

















