சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற என்ஜினீயர் ஸ்ரீராம் ராஜகோபாலன், தனது பிறந்தநாளை ஒட்டி, கடந்த மார்ச் 16-ம் திகதி வாங்கிய லாட்டரியில் ஜாக்பாட் அடித்தது.

கண்களை மூடிக்கொண்டே செல்போனில் யதார்தமாக தொட்ட ஒரு நம்பருக்கு லாட்டரி விழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “நான் முதலில் அதை நம்பவில்லை.

நான் டிரா வீடியோவை மீண்டும் பார்த்தேன், வென்ற எண்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் எடுத்தேன்.

முதலில் என் கண்ணையே இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது பயம் கலந்த சந்தோஷத்தை தருகிறது.

70 சதவீதம் மகிழ்ச்சி. 30 சதவீதம் பயம். இது ஒரு பெரிய தொகை. இதற்கு முன்பு இதுபோன்ற ஒன்றை நான் சமாளித்ததில்லை.

எனக்கு தொண்டு செயல்களில் ஈடுபாடு உண்டு, புற்றுநோய் பலரின் வாழ்க்கையை, குறிப்பாக குழந்தைகளை எவ்வளவு ஆழமாகப் பாதிக்கிறது என்பதைக் காண்கிறேன்.

மேலும் முக்கியமான காரணங்களை ஆதரிக்க விரும்புகிறேன். கோவில்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதல் புற்றுநோய் தொண்டு நிறுவனங்கள் வரை. செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன.

மக்கள் சில நேரங்களில் வெற்றிபெறுவதில் வெறித்தனமாக இருப்பார்கள்.

ஆனால் அதிர்ஷ்டம் சூத்திரங்களைப் பின்பற்றுவதில்லை. பொறுப்புடன் விளையாடுவது, உங்களால் முடிந்ததை வாங்குவது மற்றும் அனுபவத்தை அனுபவிப்பது மட்டுமே உத்தி. அதுதான் உற்சாகம்” என்று அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here