இந்தியா- பாகிஸ்தான் மோதலை நான்தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தொடர்ச்சியாக 7வது முறையாக தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, டிரம்பை சந்திக்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு சென்றிருந்தார்.

அவர்களது சந்திப்பு நடந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், “நாங்கள் இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் என்ன செய்தோம் என்பதை பாருங்கள். அந்த விவகாரத்தை முழுமையாக தீர்த்து வைத்தோம்.

அதை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்தேன். விரைவில் உக்ரைன்- ரஷ்யா மோதலையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வர போகிறேன். இது மட்டுமின்றி, இந்தியாவுடன் ஒரு மிக பெரிய ஒப்பந்தத்தை தயார் செய்து வருகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here