யுக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையில் பணயக் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்று வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையில் துருக்கியில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இதன் பின்னரான ஒப்பந்தத்தையடுத்து, பணயக் கைதிகளின் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய, இரண்டாவது நாளாக 307 பணயக் கைதிகளின் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதுடன், 3 நாட்களில் 1,000 பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here