தெற்கு கரோலினாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் கடற்கரை நகரமான லிட்டில் ரிவரில், இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதேவேளை துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
