சச்சினின் 15 வருட சாதனையை முறியடித்த சூர்யகுமார்

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை – பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் 619 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம் 15 வருட சச்சினின் சாதனையை சூர்யகுமார் முறியடித்துள்ளார்.

2010-ம் ஆண்டு சச்சின் 618 ரன்கள் எடுத்ததே ஒரு சீசனில் மும்பைக்காக எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.

மும்பை அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்:-

619* – சூர்யகுமார் யாதவ் (2025)

618 – சச்சின் டெண்டுல்கர் (2010)

605 – சூர்யகுமார் யாதவ் (2023)

553 – சச்சின் டெண்டுல்கர் (2011)

540 – லென்டில் சிம்மன்ஸ் (2015)

538 – ரோஹித் சர்மா (2013)

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles