2021 ஆம் ஆண்டு ஆறு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 74 வயது ரிக்‌ஷாக்காரருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டத்தின் பிரிவு 6 மற்றும் IPC பிரிவு 376AB (12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தல்) ஆகியவற்றின் கீழ் முன்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட அந்த நபருக்கு எதிரான தண்டனை குறித்த வாதங்களை கூடுதல் அமர்வு நீதிபதி மனோஜ் குமார் விசாரித்தார்.

2021 ஆம் ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் இரண்டு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

“தற்போதைய வழக்கின் முழு உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள், செய்யப்பட்ட குற்றத்தின் தன்மை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வயது” ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, போக்சோ சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here