நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் மின் தடைகள் குறித்து பொதுமக்களை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான கையடக்க தொலைபேசி செயலியை அல்லது இலக்கத்தை தொடர்புக் கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கமைய, ‘CEBCare’ செயலி மூலமாகவோ அல்லது 1987 என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலமாகவோ இலங்கை மின்சார சபைக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here