40க்கும் மேற்பட்ட நாடுகள் வாங்கிய வெற்றிகரமான ஆயுதத்தை ஆர்டர் செய்த கனடா..!

கனடா அதன் இராணுவ போர் திறனை திறனை உயர்த்த Carl-Gustaf M4 எனும் ஆயுத அமைப்பை வாங்குகிறது.

கானடா அரசு, தன்னுடைய தரைப்படையின் திறனை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஸ்வீடன் நிறுவனமான சாபிடம் (Saab) இருந்து Carl-Gustaf M4 வகை போர் ஆயுதத்தையும் Fire Control Device (FCD) 558-யையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம், சாபுக்கும் கானடாவுக்கும் இடையிலான நீண்டகால கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

Carl-Gustaf M4 உலகளவில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, Carl-Gustaf M4-ஐ ஏற்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இணைந்துள்ளது.

“இது Saab-ன் சமகால போர்த் திறன் கொண்ட ஆயுதங்களுக்கு உலகளாவிய தேவை உள்ளதை காட்டுகிறது. கனடா எங்கள் முக்கிய வாடிக்கையாளர், அவர்களின் போர்த் திறனை மேம்படுத்த உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்று SaabCanada தலைவர் சைமன் கேரோல் கூறியுள்ளார்.

இந்த ஆயுதத்தின் புதிய M4 பதிப்பு குறைந்த எடை கொண்டது, மின்னணு அமைப்புகளுடன் ஒருங்கிணைகக்கூடியது, மேலும் நவீன குண்டுகள் (programmable ammunition) மற்றும் intelligent sighting அமைப்புகளைப் பயன்படுத்தும் திறனைக் கொண்டது.

இந்த ஆயுதம் ஆர்மர் வாகனங்கள், உறுதியாக்கப்பட்ட கட்டிடங்கள், எதிரி படைத் தொகுதிகள் போன்ற பலவிதமான போர் சவால்களுக்கு எதிராக செயல்பட வீரர்களுக்கு துணை புரிகிறது. எளிதில் கையாளக்கூடியதாகவும் பல்துறை பயன்பாடுகளுடன் கூடியதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஒப்பந்தம், கனடா தரைப்படையின் செயல்திறனை மேம்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles