காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு பூட்டு

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹட்டன் காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு பெரிய மரங்கள் உடைந்து விழும் அபாயம் உள்ளதால், இன்று (02) மற்றும் நாளை (03) ஆகிய இரண்டு நாட்களுக்கு பாடசாலையை மூட முடிவு செய்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஜேம்ஸ் விக்டர் தெரிவித்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் பதின்மூன்று வகுப்பு வரை சுமார் 358 மாணவர்கள் படிக்கும் இந்தப் பாடசாலையில் 40 ஆசிரியர்கள் உள்ளனர்.

பாடசாலைக்கு அருகில் இரண்டு பெரிய மரங்கள் உடைந்து விழும் அபாயம் உள்ளதாக அதிபர் தெரிவித்தார். மேலும், இரண்டு மரங்களையும் வெட்டுமாறு ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மரத்தை வெட்ட நடவடிக்கை எடுக்காததாலும், கடந்த சில நாட்களாக நிலவிய பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக, மரத்தின் பல கிளைகள் பாடசாலை கட்டிடங்களின் மீதும் விழுந்ததாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (02) பாடசாலை வளாகத்தில் உள்ள பல மரங்கள் பெற்றோர்களால் வெட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles